ஆப்நகரம்

பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்-வெறிச்சோடிய ஒகேனக்கல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒகேனக்கலில் உள்ள பரிசல் ஓட்டிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

TNN 30 Jun 2016, 2:23 pm
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒகேனக்கலில் உள்ள பரிசல் ஓட்டிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
Samayam Tamil parisal drivers strike at hogenakkal
பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்-வெறிச்சோடிய ஒகேனக்கல்


கடந்த ஆண்டு ஒகேனக்கலில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.இதனை தொடர்ந்து ஒகேனக்கலில் உள்ள பரிசல் ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்த கட்டுப்பாடுகளுக்கு பரிசல் ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி பரிசல் ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை மாவட்ட நிர்வாகம் விதித்தது.இதனால் அதிருப்தி அடைந்த பரிசல் ஓட்டிகள், 19-ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள்,பரிசல் சவாரி செய்ய முடியாமல் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


வேலை நிறுத்தம் 11-வது நாளாக தொடர்வதால், பரிசல் சவாரி செல்ல முடியாது என்பதற்காக பல சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதை தவிர்த்து வருகின்றனர்.இதனால் ஒகேனக்கல் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி