ஆப்நகரம்

என் மீது பாஜக தலைமை நம்பிக்கை வைத்துள்ளது: தமிழிசை

தன் மீது பாஜக தலைமை நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தான் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்

Samayam Tamil 29 Jun 2018, 4:00 pm
தன் மீது பாஜக தலைமை நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தான் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்
Samayam Tamil tamiliai


பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கப்பட்டு விட்டதாக இன்று காலை தகவல்கள் வந்தன. இதனையடுத்து அவ்வாறு வந்த தகவல்கள் வதந்தி என்றும் தமிழிசை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் நீட்டிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து டெல்லியில் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘இத்தகைய செய்திகள் வரும் போது கட்சி வளர்ச்சிக்கும், தொண்டர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். இதை உறுதிபடுத்த வேண்டும். வாக்குச்சாவடியை பலப்படுத்தும் வகையில் நான் உழைத்திருக்கேன். தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிக்காக பொறுப்பாளர்களை நியமித்துள்ளேன்.

ஐந்து வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர்கள் என்ற வகையில் நியமனம் செய்துள்ளோம். அவர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். பாஜக கட்சி தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. வாக்குச்சாவடி அளவில் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா வரவுள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை அவர் பார்க்க உள்ளார். வரும் தேர்தலில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.’.

இவ்வாறு தமிழிசை பேசினார்.

அடுத்த செய்தி