ஆப்நகரம்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிர்ச்சி: மாணவர்கள் கவலை

தமிழகத்தில் வெளியாகியுள்ள 10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி விகிதம் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Samayam Tamil 28 Oct 2020, 6:33 pm
செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 28ஆம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்றும், 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 29ஆம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே (statement of mark sheet) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மேலும், பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கான அறிவிப்புகளையும் அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்தப்படி, 10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளிக்குப் பின் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வை 39 ஆயிரம் மாணவர்கள் எழுதிய நிலையில் 22 சதவீதம்(8,000) மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், 12ஆம் வகுப்பு தேர்வை 40 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 12 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி