ஆப்நகரம்

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளை இயக்ககோரி போராட்டம்!

திருவாரூர் அருகே பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து வர்த்தகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 3 May 2019, 1:56 pm
திருவாரூர் அருகே பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து வர்த்தகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil திருவாரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளை இயக்ககோரி பயணிகள் போராட்டம்!
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளை இயக்ககோரி பயணிகள் போராட்டம்!


திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகினர்.

வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழி செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் செல்லாமல் 1 கி.மீ தூரத்தில் மேம்பாலத்தின் அருகிலேயே இறக்கிவிட்டு பயணிகளை சிரமத்திற்கு ஆளாக்கி வந்தனர்.

இதன் காரணமாக போக்குவரத்து அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் இனி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எந்தவித பேருந்தும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இன்று மேம்பாலத்தின் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு நுழையவிடாமல் போக்குவரத்து அலுவலர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்,

இதனை கண்டித்து திருவாரூர் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் புதிய பேருந்துநிலையம் சென்ற பேருந்துகளை வழிமறித்து தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த வட்டாசியர் நக்கீரன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் நடராஜன், மறியல் செய்த வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை அழைத்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு சென்றனர். . இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி