ஆப்நகரம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்தது!

தீவிபத்து ஏற்பட்ட பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்தது.

Samayam Tamil 7 Feb 2018, 1:38 am
மதுரை: தீவிபத்து ஏற்பட்ட பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்தது.
Samayam Tamil pasupatheeswarar mandapam roof broken in madurai meenakshi amman temple
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்தது!


மதுரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த 2ஆம் தேதி இரவு தீவிபத்து ஏற்பட்டது.

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளில் மின்கசிவு ஏற்பட்டு பரவி, வீரவசந்தராயர் மண்டபத்தில் பரவியது.

இதில் சேதமடைந்த மண்டபத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அங்கிருந்த கல் தூண்டுகளில் விரிசல் ஏற்பட்டது.

அன்று இரவு முழுவதும் போராடி தீ அணைக்கப்பட்டாலும், 5ஆம் தேதி வரை புகைந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது.

அப்பகுதியில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Pasupatheeswarar mandapam roof broken in Madurai Meenakshi Amman Temple.

அடுத்த செய்தி