ஆப்நகரம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம்? வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!

வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் நோயாளிகள் மரணிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2021, 9:19 pm
கொரோனா பரவல் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளதால் மருத்துவமனைகளில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil வேலூர் அரசு மருத்துவமனை


ஏற்கனவே இந்த சவாலை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள் கையிருப்புக்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

ஆனால், கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள் என்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பாத்துக்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு: 10 லட்சத்தை பதிவு செய்த தமிழ்நாடு

இந்நிலையில், வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் அடுத்தடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தகவல் பரவ தொடங்கியது.

இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தனர் என்ற தகவல் தவறானது என்றும் சிகிச்சை பலனின்றியே அவர்கள் உயிரிழந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி