ஆப்நகரம்

திண்டுக்கல் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், பவுல்ராஜ் என்பவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 7 Feb 2018, 3:52 pm
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், பவுல்ராஜ் என்பவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil paulraj 35 a bull tamer was gored to death in a jallikattu event took place in dindigul district
திண்டுக்கல் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி


திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் புனிதசந்தியாகப்பர், புனித செபாஸ்தியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதற்காக மதுரை, திருச்சி, தேனி என திண்டுக்கலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 452 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு செய்திருந்தனர்.

இன்று காலை துவங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்க முயன்ற மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பவுல்ராஜ்(30) என்பவரை மாடு முட்டி தூக்கி வீசியது.

இதில், தலையில் பலத்த அடிபட்ட பவுல்ராஜ், திண்டக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிசிக்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் சவுந்தரராஜன் என்ற பார்வையாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர்.

அடுத்த செய்தி