ஆப்நகரம்

அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

TNN 19 Feb 2017, 3:10 pm
சென்னை: அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil people eliminates dmk admk says dmdk leader vijayakanth
அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரசியல் நிலையற்ற சூழல் நிலவி வந்தது. அதற்கு சட்டமன்றத்தில் நேற்று தீர்வு காணப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சிகளுக்கு, ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்படவேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசியது கண்டனத்துக்குரியது என்று கூறினார். மேலும் அதிமுக - திமுக இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி, ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதிக்காததால், பேரவை போர்க்களமானது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 122 வாக்குகள் பெற்று, முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றியடைந்தார்.

People eliminates DMK, ADMK says DMDK Leader Vijayakanth.

அடுத்த செய்தி