தற்பொழுது இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 ஊரடங்கு அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த ஊர் அடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசும் மாநில அரசும் தங்களால் முடிந்த நிதி உதவியையும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.
தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு சார்பாக '' ஜன்தன் யோஜனா'' வங்கி கணக்கு வைத்திருக்கும் மகளிருக்கு இந்த ஊர் அடங்கு காலத்தில் மாதம் தோறும் ரூபாய் 500 விதம் 3மாதம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
அதன்படி அந்த வங்கி கணக்குகளில் உள்ள நிவாரணத் தொகையை எடுக்க விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வாங்கியின் கிளையில் 100க்கும் மேற்பட்டவர்கள் சரீர இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை அறிவுரை வழங்கியும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத கர்ப்பிணியை பார்க்க முடியாம தவிக்கும் கணவன்..! பதிலளித்த முதல்வர்
கொரோனா பரவலை தடுக்க மக்கள் சரீர இடைவெளியை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தாலும், இதுபோன்ற காரணங்களை காட்டி மக்கள் பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று கூற முடியாது.
தினக்கூலியை நம்பியே வாழ்க்கையை நடத்தி வரும் எத்தனையோ பேருக்கு கொரோனா பயத்தை விட , சோறில்லாமல் தனது குடும்பம் பட்டினியால் மாண்டு விடுமோ என்ற அச்சம்தான் அதிகம். அரசு அனைத்து அத்தியாவசிய வசதியையும் செய்து கொடுத்துள்ளது என்று கூறும் வேளையில், இதெல்லாம் 5 நாளைக்கி கூட வராதுங்கனு ஏங்கும் எத்தனையோ வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் ஏங்கும் வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களிலும், நாம் வசிக்கும் பகுதிகளிலும் பார்க்க முடிகிறது.
தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு சார்பாக '' ஜன்தன் யோஜனா'' வங்கி கணக்கு வைத்திருக்கும் மகளிருக்கு இந்த ஊர் அடங்கு காலத்தில் மாதம் தோறும் ரூபாய் 500 விதம் 3மாதம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
அதன்படி அந்த வங்கி கணக்குகளில் உள்ள நிவாரணத் தொகையை எடுக்க விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வாங்கியின் கிளையில் 100க்கும் மேற்பட்டவர்கள் சரீர இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை அறிவுரை வழங்கியும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத கர்ப்பிணியை பார்க்க முடியாம தவிக்கும் கணவன்..! பதிலளித்த முதல்வர்
கொரோனா பரவலை தடுக்க மக்கள் சரீர இடைவெளியை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தாலும், இதுபோன்ற காரணங்களை காட்டி மக்கள் பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று கூற முடியாது.
தினக்கூலியை நம்பியே வாழ்க்கையை நடத்தி வரும் எத்தனையோ பேருக்கு கொரோனா பயத்தை விட , சோறில்லாமல் தனது குடும்பம் பட்டினியால் மாண்டு விடுமோ என்ற அச்சம்தான் அதிகம். அரசு அனைத்து அத்தியாவசிய வசதியையும் செய்து கொடுத்துள்ளது என்று கூறும் வேளையில், இதெல்லாம் 5 நாளைக்கி கூட வராதுங்கனு ஏங்கும் எத்தனையோ வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் ஏங்கும் வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களிலும், நாம் வசிக்கும் பகுதிகளிலும் பார்க்க முடிகிறது.