ஆப்நகரம்

கோவில் குளத்தில் அப்படியே சாய்ந்த மரம்- அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

குமரியில் உள்ள கோவில் ஒன்றில் மரம் விழுந்ததில் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 29 Aug 2019, 9:26 pm
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கல்லுகுட்டையில் ஸ்ரீ தர்மசதா திருக்கோவில் அமைந்துள்ளது. அங்கு 80 அடி உயர மரம் ஒன்று பிரம்மாண்டமாக காட்சி அளித்து வந்தது.
Samayam Tamil Tree Falls


இது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அந்த மரம் கோவிலின் குளத்தில் அப்படியே சாய்ந்தது. இதில் அந்தப் பகுதியில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

இங்கெல்லாம் சுமார் மழை; ஆனா அங்க செம மழை- லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்!

அவர்கள் சஞ்சம்(14), சிசுபாலன்(65), கணபதி(28), சஜின்(32) ஆகியோர் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்தின் படிக்கட்டுகளில் நின்று குளித்துக் கொண்டிருந்தனர்.

'பதக்கத்தை என் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன்'.. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் பேட்டி

இதனால் எதிர்பாராத வகையில், மரம் சாய்ந்ததால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை உள்ளூர் பொதுமக்கள் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

எங்கள் உரிமை சட்டம் என்ன ஆனது? சென்னையில் போராடிய மாற்றுத் திறனாளிகள் கைது!

இவர்களில் சிசுபாலன் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி