ஆப்நகரம்

எஸ்.ஐ. இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள்

ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 24 Feb 2016, 5:13 pm
நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil people protest aganist transfer of a police si
எஸ்.ஐ. இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள்


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் முத்துமாரி. சமீபத்தில் இவரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள், காவல் ஆய்வாளர் முத்துமாரி ஆளுங்கட்சியினரின் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காரணத்தாலேயே அவரை இடமாற்றம் செய்ய உத்த்ரவிடப்பட்டுள்ளதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் உதவி ஆய்வாளர் முத்துமாரி\யின் இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்படவில்லை என்றால் அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி