ஆப்நகரம்

கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து அரக்கோணத்தில் மக்கள் போராட்டம்!

அரக்கோணம் கிருஷ்ணாம் பேட்டையில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 19 Feb 2019, 7:31 pm
அரக்கோணம் கிருஷ்ணாம் பேட்டையில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Samayam Tamil JI


வேலூர் மாவட்டம் , அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டை 2 ஆவது தெருவில் பல மாதங்களாக சரிவர கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் அன்றாடம்பயன்படுத்தப்படும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி பல முறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் அரக்கோணம்-வேலூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்த அரக்கோணம் காவல் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி