ஆப்நகரம்

இவ்வளவு மோசமான சாலையா? அரக்கோணம் மக்கள் செய்த காரியத்தை பாருங்க!

குண்டும், குழியுமாக இருந்த சாலைகளையும், வீதிகளையும் சீரமைத்து தரக்கோரி அரக்கோணம் பகுதி மக்கள் வித்தியாசமான முறையில் போராடினர்.

Samayam Tamil 25 Sep 2019, 10:17 am
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக நடந்து வரும் பணிகளால், ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
Samayam Tamil Protest


அதில் பைப்கள் பதித்துவிட்டு, ஒழுங்காக மூடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் கனமழை காரணமாக அப்பகுதி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

காலையிலேயே பின்னி எடுக்கும் கனமழை- தத்தளிக்கும் சிங்கார சென்னை!

சில இடங்களில் சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்படவில்லை. இவை அபாயகரமான குழிகளாக மாறியுள்ளன. சாலையில் நடந்து செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

குறிப்பாக குழந்தைகள் வெளியில் செல்லாமல் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி உள்ளது. இந்தக் குழிகளை முறையாக மூட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் அரக்கோணம் பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

எப்படியும் இதைப் பேசி முடிச்சுடுவேன் - கேரள முதல்வரை சந்திக்க கிளம்பிய தமிழக முதல்வர்!

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இந்நிலையில் நேருஜி நகர் 8வது தெருவில் வசிக்கும் மக்கள் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது, சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த நகராட்சி ஆணையர் முருகேசன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த மாசத்துல இது ரெண்டாவது தடவை: மீண்டும் நிறைந்த மேட்டூர் அணை!

அப்போது பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இல்லை. உடனடியாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சிமெண்ட் சாலை போட்டுத் தர வேண்டும்.

மேலும் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு ஆணையர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

அடுத்த செய்தி