ஆப்நகரம்

காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி நெல்லையில் பேரணி;

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி நெல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

TNN 10 Dec 2017, 9:37 am
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி நெல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil people protest in tirunelveli idindhakarai
காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி நெல்லையில் பேரணி;


வங்கக்கடலில் உருவான ஒகி புயல் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

பேரணியின் போது, காணாமல் போனவர்களை மீட்கக் கோரியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை உடனடியாக வழங்கக் கோரியும் முழக்கமிட்டனர். இதில், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி