ஆப்நகரம்

சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் போலீஸ் கண்காணிப்பு!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ள இடங்களை கண்காணிக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 31 Mar 2018, 6:50 pm
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ள இடங்களை கண்காணிக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் போலீஸ் கண்காணிப்பு!!
சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் போலீஸ் கண்காணிப்பு!!


காவிரி பிரச்சனையில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த காலஅவகாசம் மார்ச் 29 ஆம் தேதியோடு முடிந்த நிலையில், மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

இதனிடையே, தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை மெரீனாவில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வெளியானதையடுத்து, போலீஸார் மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், விவசாயிகளைக் காக்க, இளைஞர்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராட வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இந்தப் போராட்டமும் வெற்றிப் பெறும் எனவும் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ள இடங்களைக் கண்காணிக்கும்படி சென்னை மாநகர காவல்துறையிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின், மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி