ஆப்நகரம்

“விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள்” : பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம்!

“விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள்” : பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம்!

TNN 7 Oct 2016, 5:41 am
விழுப்புரம் : விவசாயிகளை தற்கொலக்கு தூண்டும் வங்களிகள் மீது வழக்கு பதியவேண்டும் என்று பாமக நிறவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து விவசாய கடனை திரும்பப்பெற குண்டர்களை வைத்து மிரட்டுவதையும், அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதையும் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று ராமதாஸ் கடுமையாக தமிழக அரசை சாடியுள்ளார். மேலும் அறந்தாங்கியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Samayam Tamil people should punished wuo forced tamilnadu farmers to attempt suicide
“விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள்” : பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம்!


முத்துராமலிங்கம் என்பவர் காட்டுமன்னார் கோயில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் விவசாயத்திற்கு டிராக்டர் வாங்க கடன் பெற்றிருந்தார். ஆனால் போதிய நீர் இல்லாததால் அவரால் சம்பாதித்து கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. டிராக்டரை வாடகைக்கு விட்டு பணம் சம்பாத்திக்கலாம் என்றாலும் நீர் இல்லாத காரணத்தால் விளைச்சலே இல்லை. இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி வங்கியில் இருந்து வந்த கும்பல் ஒன்று 5ம் தேதி பணம் கட்டவில்லை என்றால் டிராக்டரை பறிமுதல் செய்துவிட்டு சென்றுவிடுவோம் என்று கூறியுள்ளனர். மறுநாள் விவசாயிகளுடன் சேர்ந்து குறிப்பிட்ட வங்கியின் முன்னால் முத்துராமலிங்கம் போராட்டம் நடத்தினார். ஆனாலும் பிடிவாதமாக டிராக்டரை பறிமுதல் செய்தே தீருவோம் என்று வங்கி நிர்வாகம் கூறியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வங்கிகள் விவசாயி, மாணவர் கல்விக்கடன் போன்றவற்றில் இவ்வாறு கடினமாக நடந்துகொள்கிறதே தவிர அதிகமாக பணம் கொடுத்தவர்களிடம் கேட்பதே இல்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது போன்று அரியலூர் மாவட்டம் ஒரத்தூரை சேர்ந்த அழகர் எனும் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த பாலன் என்பவர் கடன் கட்ட தவறியதால் கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளனர். மதுரை மாவட்டம் அனுப்பனடியை சேர்ந்த லெனின் எனும் மாணவனிடம் கல்விக்கடன் வசூலிக்க குண்டர்களை வைத்து மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்திய அளவில் ஏராளமான கடன் தொகையை மீதம் வைத்துள்ள வங்கிகள் அப்பாவிகளான விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மீது இவ்வாறு வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ரூ.1.1 லட்சம் கோடி வரை தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் கடன் நிலுவையில் இருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி