ஆப்நகரம்

சசிகலா ஆதரவு தி.நகர் எம்.எல்.ஏவை திட்டித் தீர்த்த பொதுமக்கள்

சசிகலா ஆதரவு தி.நகர் எம்.எல்.ஏவை, பொதுமக்கள் திட்டித் தீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

TNN 21 Feb 2017, 4:38 pm
சென்னை: சசிகலா ஆதரவு தி.நகர் எம்.எல்.ஏவை, பொதுமக்கள் திட்டித் தீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil people shouted against sasikala supporter t nagar mla
சசிகலா ஆதரவு தி.நகர் எம்.எல்.ஏவை திட்டித் தீர்த்த பொதுமக்கள்


சென்னை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன், ஜீவா பூங்காவிற்கு நடைபயிற்சி சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர். சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, சொகுசு விடுதியில் தங்கியது குறித்தும், சசிகலா தரப்பிற்கும் ஆதரவாக செயல்பட்டது குறித்தும் கேள்வி கேட்டனர். பின்னர் தங்களுடைய கோபத்தை வார்த்தைகளால் வாரி இறைத்தனர். இதையடுத்து சத்யநாராயணனால் பதில் கூற முடியாமல் தடுமாறினார்.

அப்போது, சசிகலாவின் தண்டனையை மட்டும் பார்க்க வேண்டாம் என்றும், கட்சி கலையக் கூடாது என்று விரும்பியதாக குறிப்பிட்டார். ஒருவேளை கட்சி பிளந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியோ அல்லது மறுதேர்தலோ வருவதையோ விரும்பவில்லை என்று கூறினார். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே அவ்வாறு செயல்பட்டதாக விளக்கினார். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமானதால், அங்கிருந்து விரைவாக வெளியேறினார்.

People shouted against Sasikala supporter T Nagar MLA.

அடுத்த செய்தி