ஆப்நகரம்

ஆட்டுக்குட்டியில் இப்படியொரு அதிசயமா? படையெடுத்து பார்க்க வரும் கோவை மக்கள்!

மேட்டுப்பாளையம் அருகே ஆட்டுக்குட்டிக்கு இப்படியொரு அதிசயம் நிகழ்ந்திருப்பதை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Samayam Tamil 22 Nov 2019, 11:09 am
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜல்லி மேட்டுப்புதூர் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேவையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
Samayam Tamil Goat


இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு வளர்க்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவர்களிடம் 120க்கும் மேற்பட்ட ஆடுகள் இருக்கின்றன. இந்த சூழலில் இவர்களது பட்டியில் ஆடு ஒன்று நேற்று குட்டியை ஈன்றது.

“பஞ்சமி நிலத்தை பாமகவும் ஆக்கிரமித்துள்ளது”

வழக்கம் போல் குட்டிக்கு 4 கால்கள் இருந்தன. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் வயிற்றில் கூடுதலாக 2 கால்கள் இருந்துள்ளன. இது அதிசயப்படும் நிகழ்வாக இருந்தாலும் ஆட்டுக்குட்டிக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

உடனே கால்நடை மருத்துவரை அழைத்து வந்து ஆட்டுக்குட்டியின் உடல்நலனை சோதித்துள்ளனர். அது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் கூறியுள்ளார்.

ஸ்டாலினிடம் மிசா ஆதாரம் கேட்பது, சீதையை தீயில் இறங்கச் சொன்னது போல: நீதிபதி சந்துரு

இதுபற்றி ஆடுகளை வளர்த்து வரும் விஜயன் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக ஆடுகள் வளர்த்து வருகிறேன். ஆனால் 6 கால்களுடன் பிறந்த ஆட்டுக் குட்டியை இப்போது தான் பார்க்கிறேன்.

அதேசமயம் ஆட்டுக்குட்டி உடல்நலத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்நிலையில் 6 கால்களுடன் இருக்கும் ஆட்டுக்குட்டியை காண அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

நாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்!

அடுத்த செய்தி