ஆப்நகரம்

Surjith Wilson: குழந்தை சுஜித் உடலுக்கு இறுதிச் சடங்கு - ஏராளமானோர் நேரில் அஞ்சலி!

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான். அவனது உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Samayam Tamil 29 Oct 2019, 8:13 am
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சிறுவன் சுஜித் விலன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். அவனை மீட்க சுமார் 82 மணி நேரம் மீட்பு பணிகள் நடைபெற்றன.
Samayam Tamil Sujith dead


ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை சோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் சுஜித்தின் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு - மருத்துவமனையில் பிரேத பரிசோதனை!

இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், சுஜித்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் நடுக்காட்டுப்பட்டிக்கு சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சாப் " டூ" நடுக்காட்டுப்பட்டி.... சுஜித்தை மீட்க களமிறங்கும் விவசாயிகள் !!

வழி நெடுகிலும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு சிறுவன் சுஜித்தின் உடல் நல்லடக்க செய்யப்பட உள்ளது.

அங்கு உடல் கொண்டு செல்லப்பட்ட உடன், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் சுஜித்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

''65 அடி'' குழிக்குள் சென்ற வீரர் மேலே வந்தடைந்தார்..!! இறுதி கட்டத்தை நெருங்கும் மீட்பு பணி..!

அடுத்த செய்தி