ஆப்நகரம்

பிரணாப்புடன் மக்கள் நலக் கூட்டணியினர் நாளை சந்திப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.

TNN 20 Oct 2016, 4:24 pm
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.
Samayam Tamil people welfare alliance leader meet pranab tomorrow for cauvery issue
பிரணாப்புடன் மக்கள் நலக் கூட்டணியினர் நாளை சந்திப்பு


காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியத்தை கடந்த அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாளில்,காவிரி நதி நீர் பங்கீடு #CauveryIssue விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.

அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்த வேண்டும். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரமில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை #CauveryManagementBoard உடனடியாக அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் வாதத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ​ இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையும் திருப்திகரமாக இல்லை எனவும் பரவலாக கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.
People welfare alliance leader meet Pranab tomorrow for Cauvery issue #CauveryManagementBoard

அடுத்த செய்தி