ஆப்நகரம்

O+ve ரத்தம் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பாம்பே O என்ற அரிய வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்தவங்கியில் தங்களது விபரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Samayam Tamil 30 Oct 2018, 9:01 pm
பாம்பே O என்ற அரிய வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்தவங்கியில் தங்களது விபரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Samayam Tamil bombay o


O+ve ரத்தம் உள்ளவர்கள் தங்களது ரத்தம் பாம்பே O என்ற அரிய வகை ரத்தமா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த மெகர் ஜான் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய அறுவை சிகிச்சைக்கு இரத்த தானம் தேவைப்பட்டது. அப்போது மெகர் ஜானின் இரத்தத்தைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பாம்பே ஓ என்ற அரிய வகை இரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை ரத்தமானது 10 லட்சம் பேரில் வெறும் 4 பேருக்கு மட்டுமே இருக்கும். இதையடுத்து பாம்பே ஓ ரத்தம் உள்ளவர்கள் மெகர் ஜானுக்கு உதவுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் விளம்பரம் செய்தது.

இந்நிலையில், ஸ்ரீவத்ஸன் என்பவருடைய ரத்த வங்கியில் இருந்து 4 பேர் ரத்த தானம் செய்தனர். இதையடுத்து அந்த ரத்தத்தைப் பெற்றுக் கொண்ட மருத்துவர்கள், மெகர் ஜானுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறுகையில், ‘பாம்பே ஓ என்ற ரத்தம் மிகவும் அரிதானது. 10 லட்சம் பேரில் நான்கு பேருக்கு மட்டும் தான் இருக்கும். முதலில் 1952ம் ஆண்டு பாம்பேயில் இது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு பாம்பே ஓ என்று பெயர் வந்தது. இந்த வகை ரத்தம் கிடைப்பது மிகவும் அரிது என்பதால், பாம்பே ஓ ரத்தம் உள்ளவர்கள் தங்களது விபரங்களை ரத்த வங்கியில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இதனால் அவசர காலக்கட்டங்களில் ரத்தம் தேவைப்படும் போது உதவ முடியும்’.

அடுத்த செய்தி