ஆப்நகரம்

போதைப் பொருளுக்கு எதிராக கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் பேரணி

கிருஷ்ணகிரியில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருள் தீமைகள் குறித்த நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 3 Jan 2019, 11:11 pm
கிருஷ்ணகிரியில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருள் தீமைகள் குறித்த நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil Alcohol drinking


கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது இதனை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக கிருஷ்ணகிரி ரவுண்டானா சென்று முடிவுற்றது.

இந்த பேரணியில் பள்ளி கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்களின என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியின்போது கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியும் அதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

அடுத்த செய்தி