ஆப்நகரம்

மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கக் கூடாது - கமல்ஹாசன்

ஓட்டுக்காக ரூ.5 ஆயிரம், 1000 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Samayam Tamil 26 Jan 2019, 9:12 pm
ஓட்டுக்காக ரூ.5 ஆயிரம், 1000 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Samayam Tamil Kamal Haasan 1


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கடலூாில் உள்ள பள்ளில் ஒன்றில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவா் கூறுகையில், தோ்தலில் நோட்டாவிற்கு வாக்கு அளிக்காதீா்கள். அது உங்கள் வெறுப்பை தான் வெளிப்படுத்துகிறது. மாறாக விருப்பத்தை காட்டவில்லை.

தோ்தலின் போது ஓட்டுப் போடுவதற்கு பணம் வாங்கக் கூடாது. அரசு ஊழியா்கள் ஏன் முறையாக பணியாற்றிவல்லை என்று மக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும். நாடு மாறுவதற்கு மக்கள் பங்களிக்க வேண்டும். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன என்று கேள்வி எழுப்பினாா்.

மேலும் அவா் பேசுகையில், உள்ளாட்சித் தோ்தலை நடத்த பெண்கள் கோாிக்கை வைக்க வேண்டும். கிராம நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டியவா்கள் நாம். மக்களுக்கு பணியாற்ற மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பு தாருங்கள் என்று கூறினாா்.

இதன் தொடா்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

அடுத்த செய்தி