ஆப்நகரம்

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TNN 28 Feb 2017, 2:01 am
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil perarivalan admitted in hospital
பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி


கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகாலம் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அம்மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக நடைபெறும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்ப்பட்டுள்ளாரா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.
Perarivalan admitted in hospital

அடுத்த செய்தி