ஆப்நகரம்

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 12 Aug 2021, 3:08 pm
Samayam Tamil perarivalan
28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆளுநர் முடிவெடுக்காமல் தள்ளிப்போடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? எந்தெந்த மாவட்டங்களுக்கு சிக்கல்?இதனையேற்ற தமிழக அரசு, 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது, இதன்படி கடந்த மே மாதம் 28ம் தேதி பேரறிவாளன் தன்னுடைய வீட்டுக்கு வந்தார். பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல இருந்தபோது, பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 50 சதவீத மாணவர்களுக்கு அனுமதி!
இந்நிலையில், தற்போது சிறுநீரகத் தொற்று உட்பட உடல்நல பிரச்னைகளுக்காக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி