ஆப்நகரம்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனின் மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்ப பெற வேண்டும் என்ற பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 14 Mar 2018, 3:44 pm
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்ப பெற வேண்டும் என்ற பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil perarivalans petition dismissed in rajiv murder case
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனின் மனு தள்ளுபடி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தான் வழங்கிய வாக்குமூலத்தை சி.பி.ஐ. அதிகாாி மாற்றி அமைத்தாா். சி.பி.ஐ. அதிகாாி அளித்த தவறான தகவலால் தான் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தீா்ப்பை திரும்ப பெறவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பேரறிவாளனின் வழக்கறிஞாிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி கேள்வி எழுப்பினா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடா்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்து பாா்த்தால் அவா் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபி என்பது தொிகிறது.

9 வாட் பேட்டாியைக் கொண்டு வெடிகுண்டு தயாாிக்க முடியும் என்பது டிப்ளமோ(Electrical) படித்த பேரறிவாளனுக்கு தொியாதா? கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்ததே அந்த பேட்டாி தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்காக இன்று தீா்ப்பை மாற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பினா்.

அதற்கு பேரறிவாளன் தரப்பில் அந்த பேட்டாியைக் கொண்டு தான் வெடிகுண்டு தயாாிக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப் படவில்லை என்று தொிவிக்கப்பட்டது. மேலும் பேரறிவாளனின் மனு மீது சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து நீதிபதிகள், 1991ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மாற்றி அமைக்க முடியாது என்று தொிவித்து விட்டனா். இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சட்டத்தின்படி விடுதலை செய்யப்பட மாட்டாா்கள் என்பது தெளிவாகிறது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை மீதான வழக்கில் 4 வார காலத்திற்கு சி.பி.ஐ. பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனா்.

அடுத்த செய்தி