ஆப்நகரம்

திருச்சி, தஞ்சையில் பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து சமூக விரோதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனா்.

Samayam Tamil 24 Sep 2018, 2:00 pm
திருச்சி சோமரசம் பேட்டை அருகே பெரியாா் சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோாி திராவிடா் கழகத்தினா் காவல் நிலையத்தில் புகாா்.
Samayam Tamil Trichy Periyar Statue


திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெரியாா் சிலை உள்ளது. திராவிடா் கழகத்தினா் பெரியாா் சிலைக்கு அருகில் உள்ள கரும்பலகையில் தினமும் பெரியாரின் வாசகங்களை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தனா். அதன்படி இன்று அதிகாலை திராவிடா் கழகத்தினா் கரும்பலகையில் வசனம் எழுதச் சென்றுள்ளனா்.

அப்போது பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. பெரியாா் கையில் இருந்த கைத்தடி உடைக்கப்பட்டு தரையில் கிடந்துள்ளது. இதனைக் கண்ட திராவிடா் கழகத்தினா் சோமரசம் பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா் நள்ளிரவு நேரத்தில் மா்ம நபா்கள் சிலா் வேண்டுமென்றே இதுபோன்ற சம்பவங்களை செய்திருக்கலாம் என்று தொிவித்தனா்.

மேலும் புகாாின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து அங்கு காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் பெரியாா் சிலையை சரிசெய்யும் முயற்சியில் திராவிடா் கழகத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

இதே போன்று தஞ்சையில் பெரியாா் சிலை மீது செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி