ஆப்நகரம்

காவிரி ஆர்ப்பாட்டம்; நெல்லையில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை!

காவிரி மோலாண்மை அமைக்கக் கோரி பெரும் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதால், நெல்லை பொருட்காட்சி திடலில் ஐபிஎல் போட்டியை நேரலை ஒளிபரப்புக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

Samayam Tamil 7 Apr 2018, 12:35 pm
காவிரி மோலாண்மை அமைக்கக் கோரி பெரும் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதால், நெல்லை பொருட்காட்சி திடலில் ஐபிஎல் போட்டியை நேரலை ஒளிபரப்புக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
Samayam Tamil nellai ipl ban

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னையான காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதனையிடையே இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திசை திருப்பக்கூடும் என்றும் எனவே ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் பிரச்சாரங்கள் எழுந்துள்ளன.
மேலும், தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்றும் அவ்வாறு நடந்தால், சொந்த பணத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ஐபிஎல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் அரங்கில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருந்தார்.
இதனால், ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

இதனிடையே, ஐபில் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்க முடியாதவர்களின் வசதிக்காக திறந்தவெளி மைதானத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்திருந்தது.

நெல்லை மாவட்டத்தில், பொருட்காட்சித் திடலில்
மிகப்பெரிய திரையில் ஐபிஎல் போட்டியை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆர்ப்பாட்டம், காவிரி போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட நெல்லை மாநகர காவல்துறை, பொது இடத்தில் ஐபிஎல் போட்டியை நேரலையாக ஒளிபரப்ப தடை செய்துள்ளது.

அடுத்த செய்தி