ஆப்நகரம்

யுபிஎஸ்சி தேர்வில் சாதனைப் படைத்த தமிழர்!!

ஐஏஎஸ். ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் ஏழாவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

Samayam Tamil 4 Aug 2020, 8:29 pm
அரசுத் துறைகளில் ஐஏஎஸ். ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
Samayam Tamil ias


இந்த நிலையில், காலியாக இருந்த 829 பணியிடங்களுக்கு அகில இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது.

இந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணலும் நடத்தப்பட்டது. இதையடுத்து, இத்தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் லெளியிடப்பட்டுள்ளன.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2019 தேர்வு முடிவுகள் வெளியானது - முழு விவரம் இதோ!

இந்தத் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் ஏழாவது இடத்தை பிடித்து சாதித்துள்ளார். நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டிற்கான (2020) சிவில் சர்வீஸ் தேர்வுகளை கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதிக்கு இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி