ஆப்நகரம்

"ஓசி செக்ஸ் உறவுக்கு கூடத்தான் இவ்வளவு பேர் வருவாங்க..!"-போராட்டத்தை கொச்சைப்படுத்திய பீட்டா ஆர்வலர்..!

"இலவசமாக செக்ஸ் உறவு அளிப்பதாக அறிவித்தால் கூட இவ்வளவு பேர் கூட்டமாக வருவார்கள்” என ஜல்லிக்கட்டு போரட்டம் குறித்து பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் கொச்சையாக விமர்சித்துள்ளார்.

TNN 20 Jan 2017, 4:29 am
"இலவசமாக செக்ஸ் உறவு அளிப்பதாக அறிவித்தால் கூட இவ்வளவு பேர் கூட்டமாக வருவார்கள்” என ஜல்லிக்கட்டு போரட்டம் குறித்து பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் கொச்சையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil peta activist radharajan vulgarising jallikattu protest in tamilnadu
"ஓசி செக்ஸ் உறவுக்கு கூடத்தான் இவ்வளவு பேர் வருவாங்க..!"-போராட்டத்தை கொச்சைப்படுத்திய பீட்டா ஆர்வலர்..!


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பது மட்டுமின்றி,பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பல காலமாக தொடர்ந்து ஜல்லிக்கட்டை எதிர்த்து வரும் பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதா ராஜன்,நேற்று பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,”ஃபிரீயா செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூடத்தான் 50,000 பேர் வருவாங்க.ஒரு பிரச்சனை வந்தா,அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராடனும்றது அவசியம் இல்லை.நம்ம நாட்டு பிரஜைகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்க.அதனால் சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்ப நாம மதிக்கணும்.

காளைகளை வச்சு பெட்டிங் நடத்துறாங்க.ஆனா என்னை வச்சு சூதாட்டம் செய்னு எந்த காளையாவது வந்து சொல்லுமா?.ஜல்லிக்கட்டுக்கு எதிரா அவசரச் சட்டம் கொண்டு வந்தா,நாங்க சட்டரீதியா என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுப்போம்.”என தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை உதாசீனப்படுத்தியும்,கொச்சைப்படுத்தியும் ராதாராஜன் பேசியுள்ளார்.
இவரின் இந்த திமிர் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

PETA activist RadhaRajan Vulgarising Jallikattu Protest in Tamilnadu

அடுத்த செய்தி