ஆப்நகரம்

Gowthaman: ஜல்லிக்கட்டை தொட்டால் போராட்டம் வெடிக்கும் : பீட்டாவை எச்சரிக்கும் கெளதமன்

பீட்டா அமைப்பினர் மீண்டும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தடை செய்ய முயற்சி செய்துவருவதாக இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Dec 2018, 1:31 pm
மதுரை :பீட்டா அமைப்பினர் மீண்டும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தடை செய்ய முயற்சி செய்துவருவதாக இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Director Gowthaman


மதுரை விமான நிலையத்தில் திரைப்பட இயக்குனர் கௌதமன் பேட்டி:
பீட்டா என்ற பன்னாட்டு அமைப்பு ஆதி தமிழ் இனத்தை சீண்டிப் பார்கிறது. ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பை எதிர்த்து தடை வாங்க பீட்டா நினைகிறது. தமிழக அரசு இயற்றிய சிறப்பு சட்டம் யாரும் தடை வாங்க முடியாது என்று கூறினார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது வரை வாபஸ் பெறாமல் உள்ளது. அப்போது உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கை வாபஸ் பெறவதாக வாக்கு கொடுத்தார். இரண்டு வருடத்திற்கு பிறகாவது தற்போது மாணவர்கள் மீது உள்ள முதல்வர் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் இதற்காக தனியாக போராட வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி