ஆப்நகரம்

ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ஃபாத்திமா லத்தீஃப் லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது

Samayam Tamil 13 Dec 2019, 3:03 pm
சென்னை: மாணவி ஃபாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ஃபாத்திமா லத்தீஃப்
ஃபாத்திமா லத்தீஃப்


கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் (18). சென்னை ஐஐடியில் எம்.ஏ ஹூமானிட்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் (ஒருங்கிணைந்த) பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வந்த இவர், கடந்த மாதம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடிக்கும் ஃபாத்திமா, கடந்த மாதம் நடைபெற்ற இண்டர்னல் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பென் பெற்றதாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ஐஐடி மாணவி மரணம்: பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல்!

ஆனால், மாணவியின் செல்போனில் பதியப்பட்ட சில குறிப்புகளை சுட்டிக்காட்டிபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தனது மகளுக்கு ஏற்படுத்திய மன உளைச்சல்தான் மரணத்துக்கு காரணம் என தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கேளர முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு மாணவியின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். அத்துடன், தமிழகம் வந்துள்ள மாணவியின் தந்தை, டிஜிபி மற்றும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஃபாத்திமா லத்தீஃப் தந்தையிடம் அமித் ஷா கொடுத்த உறுதி!

இதனிடையே ஃபாத்திமா லத்தீஃப் லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் போது, சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது.

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்..! விசாரணைக்கு ஆஜரான தந்தை...

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு, ஃபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேவைப்பட்டால் ஃபாத்திமா வழக்கை சிபிஐக்கு மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம், “ஐஐடி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க இதுவே சரியா நேரம். மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் உள்ள பிற ஐஐடிக்களும் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுகக் வேண்டும். ஃபாத்திமா வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜனவரி 22ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் வேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி