ஆப்நகரம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி..! - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Samayam Tamil 4 May 2020, 1:28 pm
அதிமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அதிமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதையடுத்து, அதுகுறித்த விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது.
Samayam Tamil தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி


சொகுசு கார் முதல் ரியல் எஸ்டேட் வரை - ஓபிஆர் நிறுவனத்தால் சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. அதற்கான முடிவை அரசே தீர்மானிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், மதுவிலக்கு என்ற கொள்கை முடிவில் உறுதியாக இருப்பதாக அரசு கூறிய பதிலை ஏற்று இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி