ஆப்நகரம்

பெரிய சிக்கலில் இருந்து தப்பித்தது எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவி!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வரையும் விசாரிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

Samayam Tamil 16 Jul 2020, 4:30 pm
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்திரவ்தை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பூதாகரமகியுள்ளது. இந்த வழக்கை கொலை வழக்காக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


இதனிடையே, இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை, மகன் ஆகிய இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர் என்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே தெரிவித்தார். இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் எனப் பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயலாகவே இதனை கருத வேண்டும். இந்த கொலைக்கு முதல்வருக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதைச் செய்தால் மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், இதனை விசாரிக்கும் பட்சத்தில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சினை. இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டாலே முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார் என்ற நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது.

அப்போது, சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ், காவல் மரணம் தொடர்பாக பொய்யான தகவலை தெரிவித்த முதல்வர் பழனிசாமி மீது விசாரணை நடத்தக் கோரிய அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அடுத்த செய்தி