ஆப்நகரம்

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன

Samayam Tamil 18 Oct 2019, 12:37 pm
மதுரை: நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil madurai high court


தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இது இல்லாம உங்களால ஓட்டுப்போட முடியாது... இடைத்தேர்தல் தொகுதி மக்களே உஷார் !!

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவும் இந்த தொகுதிகளை கைப்பற்ற முனைப்பு காட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் ஆகியோருடன் 19 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மின்னணு ஓட்டு இயந்திரங்களில் கள்ள ஓட்டுகள் முன்னரே பதியப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அதனை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஓட்டுக்கு பணமா கொடுக்கிறீங்க? திமுக எம்.எல்.ஏ உட்பட 7 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

அத்துடன், பணப்பட்டுவாடா புகார்களும் எழுந்து வருகின்றன. அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராத கட்டுக்கட்டான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்களர்களுக்கு கொடுக்கப்படவிருந்த ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு.! காங்கிரஸ் நிர்வாகி வீட்டிலிருந்து 50 லட்சம் பறிமுதல்..

அதில், அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இடைத்தேர்தலை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அடுத்த செய்தி