ஆப்நகரம்

டீசல் விலை உயர்வை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தம்!

டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மீனவர்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவர்கள் இன்று 4வது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2018, 12:37 pm
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மீனவர்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவர்கள் இன்று 4வது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil TN1
டீசல் விலை உயர்வை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தம்!


சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

இதனால் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தி, பாம்பன் விசைபடகு மீனவர்கள் இன்று 4வது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், 120க்கும் மேற்பட்ட விசைப் படகுகள்பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடலுக்கு செல்லப் போவதில்லை என அப்பகுதி மீனவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி