ஆப்நகரம்

பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 19 Apr 2017, 3:48 pm
தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil petrol bunks holiday on every sunday
பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சுமார் 4,850 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் (Consortium of Indian Petroleum Dealers) அழைப்பை ஏற்று, பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், இந்த அறிவிப்பு, வருகிற மே மாதம் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை 24 மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் இனி இயங்காது. தமிழகத்தில் மட்டும், ஆண்டிற்கு ரூ.56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் நுகரப்படுகிறது எனவும், ஒரு நாள் எரிபொருள் சிக்கனத்தினை மேற்கொண்டால், ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேராள மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி