ஆப்நகரம்

2 லிட்டர் பெட்ரோல் ரூ. 150க்கும் அதிகம்! இன்றைய பெட்ரோல், டிசல் விலை!

பெட்ரோல் மற்றும் டிசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. விலைவாசி, உயருமோ என அச்சத்தில் பொது மக்கள்.

Samayam Tamil 20 Sep 2019, 7:39 am
கடந்த ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை மாதம் இருமுறை உயர்த்தும் வழக்கம் மட்டுமே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலைகளைத் தினமும் நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.
Samayam Tamil petrol11


இதையடுத்து நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தவுடன், தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டு வந்தது. எனினும், இது முன்பைவிட அதிகளவு உயர்ந்தே உள்ளது.

தொடர்ந்து மாற்றத்தைச் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி முதல் பெட்ரோலின் விலை தொடர் ஏறுமுகத்தில் உள்ளது. பெட்ரோல் விலை நேற்றும் உயர்த்திடப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைநகரான சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.93க்கு விற்கப்படுகிறது. இது நேற்று விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையைவிட 57 காசுகள் அதிகம். அதேபோல், டீசலை பொறுத்தமட்டில் ஒரு லிட்டர் ரூ. 70.07க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை நேற்றைய தேதியைவிட 10 காசுகள் அதிகரித்துள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துவிட்டது. பெட்ரோல் விலையை நினைத்தாலே போதும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகிவிட வேண்டிய நிலையில்தான் தொடர்கிறது. எரிப்பொருள்களின் விலை இப்படி உயர்ந்தால், விலைவாசியைச் சமாளிக்க என்னதான் செய்வது என பொது மக்கள் புலம்பத் தொடங்கி விட்டனர்.

அடுத்த செய்தி