ஆப்நகரம்

அழுகிய பிணத்துடன் தவித்த மாற்றுத்திறனாளி மூதாட்டி

ஐந்து நாட்களாக தங்கையின் அழுகிய பிரேதத்துடன் தவித்த மாற்றுத்திறனாளி முதாட்டியை அண்டைவீட்டாரின் உதவியுடன் போலிஸார் மீட்டனர்.

TOI Contributor 10 Jul 2016, 2:46 pm
சென்னை: ஐந்து நாட்களாக தங்கையின் அழுகிய பிரேதத்துடன் தவித்த மாற்றுத்திறனாளி மூதாட்டியை அண்டைவீட்டாரின் உதவியுடன் போலிஸார் மீட்டனர்.
Samayam Tamil physically challenged woman lives with sisters body for 5 days
அழுகிய பிணத்துடன் தவித்த மாற்றுத்திறனாளி மூதாட்டி


சென்னையை சேர்ந்த கோவிந்தம்மாள் (55) என்பவர் மாற்றுத்திறனாளியான தனது அக்கா உமாவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த திங்களன்று உடல்நிலை சரியில்லை என்று படுத்த கோவிந்தம்மாள் திரும்ப எழுந்திருக்கவில்லை. மூதாட்டி உமா கோவிந்தம்மாவை பலமுறை அழைத்துள்ளர் ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .மாற்றுத்திறனாளி உமாவால் இதுகுறித்து பிறரிடம் கூறமுடியாமல் வேதனையில் தவித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் வீட்டில் வேலைசெய்யும் செல்வி என்பவர் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வேலைக்கு வந்தார்.அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டியிந்தது. வீட்டிலிருந்து துற்நாற்றம் விசுவதை கண்டு சந்தேகமடைந்த செல்வி அண்டை வீட்டாரின் உதவியுடன் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலிஸார் வீட்டில் சடலமாக இருத்த கோவிந்தமாவையும், கடந்த ஐந்து நாட்களாக அழுகிய பிரேதத்துடன் உணவின்றி தவித்த மாற்றுத்திறனாளி உமாவையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து எலிபேண்ட் கேட் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி