ஆப்நகரம்

போயஸ் கார்டனை நினைவு இல்லமாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டனை நினைவு இல்லமாக அறிவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TNN 16 Feb 2017, 6:53 pm
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டனை நினைவு இல்லமாக அறிவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil pil to declare jayalalithaas poes garden residence as memorial dismissed
போயஸ் கார்டனை நினைவு இல்லமாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி


இதுதொடர்பாக, சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை. அவரது அண்ணன் மகள் மற்றும் மகன் ஆகியோரே உள்ளனர். ஏற்கனவே, வாரிசு இல்லாமல் இறந்த முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜ், அண்ணாதுரை, எம்ஜிஆர் ஆகியோரின் வீடுகளை நினைவு இல்லமாக அரசு மாற்றியுள்ளது. அதேபோன்றே, ஜெயலலிதா வீட்டையும் அறிவிக்க வேண்டும் என, மனுதாரர் பார்த்திபன் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதேபோன்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதேபோன்று, தற்போதைய மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை பராமரிப்பதோடு, அதில் நிரந்தரமாகச் சிலர் வசித்து வருவதால், வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வாய்ப்பில்லை. இதில், தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நினைவு இல்லமாக மாற்ற வாய்ப்புள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The Madras high court on Thursday dismissed a public interest litigation that sought to declare and maintain the Poes Garden residence of late Tamil Nadu chief minister J Jayalalithaa as a memorial.

அடுத்த செய்தி