ஆப்நகரம்

பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை: சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் போலீசாரால் சிறையில் தாக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TOI Contributor 24 Jul 2016, 5:32 pm
சென்னை: சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் போலீசாரால் சிறையில் தாக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil piyush manush attacked in jail human right org give notice to tn govt
பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் தமிழக அரசுக்கு நோட்டீஸ்


கடந்த 8ம் தேதி சேலம் மாவட்டதிலுள்ள முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினார் என்று கூறி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவரை 30 போலீசார் சேர்ந்து கொடூர தாக்குதல் நடந்தினார்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் 2 வாரகாலத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி