ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: அதிகரிக்கும் அதிவிரைவுப் பேருந்துகள்!

மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அதிவிரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Sep 2020, 11:22 am
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகிய அறிவிப்புகள் கடந்த மாத இறுதியில் வெளியாகின.
Samayam Tamil setc


செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் மக்கள் வழக்கம்போல் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது.

சாலை வரிகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கவில்லை. எனவே மக்கள் அரசு விரைவுப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஓபிஎஸ் Vs இபிஎஸ்: அதிமுகவில் யார் கை ஓங்கியுள்ளது?

கொரோனா அச்சம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள் வழக்கமான தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருவதால் பேருந்துகள் போதிய அளவில் இல்லை என்ற புகார் எழுந்தது.

இந்நிலையில் 200 சொகுசுப் பேருந்துகளை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள், “தமிழக அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 600க்கும் மேற்பட்ட சொகுசு, விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஓபிஎஸ் மாஸ்க் உடன் குவிந்த அதிமுக நிர்வாகிகள்; செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு!

சில வழித்தடங்களில் பயணிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், விரைவுப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 200 சொகுசு பேருந்துகளை இயக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி