ஆப்நகரம்

இனி கட்டாயமாக பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை: உறுதி செய்த நீதிபதிகளின்

நீண்ட காலமாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியை தடை செய்வது பற்றி விவாதம் நடந்துவந்த நிலையில், பிளாஸ்டிக் பைகளை வருகிற ஜனவரி 1 முதல் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் தயாரித்து விற்கும் வியாபாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Samayam Tamil 27 Dec 2018, 5:28 pm
நீண்ட காலமாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியை தடை செய்வது பற்றி விவாதம் நடந்துவந்த நிலையில், பிளாஸ்டிக்பைகளைவருகிறஜனவரி 1 முதல்பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது.இந்தஅரசாணையைஎதிர்த்து பிளாஸ்டிக் தயாரித்து விற்கும் வியாபாரிகளால்தாக்கல்செய்யப்பட்டமனுக்களைதள்ளுபடிசெய்துநீதிபதிகள்உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil court order


மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிமுதல் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய, தயாரிக்க, சேமிக்கக் கூடாது.

தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.



‘பிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே பொதிந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு விலக்களித்துள்ளது. இது சட்டவிரோதமானது. பன்னாட்டு நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களை பாதுகாக்கும் வகையில், இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

‘ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த தடை உத்தரவு பிறப்பித்த அரசாணையை அந்தந்த மாநில ஐகோர்ட்டுகளும் உறுதி செய்துள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, எதிர்கால சந்ததியினரையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது’ என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதிட்டார்.

‘பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக தடை செய்ய வேண்டும்’ என்பதுதான் எங்களது தனிப்பட்ட கருத்து. அதேநேரம், தமிழக அரசு பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை பொதியப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளித்து இருப்பதை ஏற்க முடியாது’ என்று கருத்து தெரிவித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அடுத்த செய்தி