ஆப்நகரம்

பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

Samayam Tamil 15 Sep 2018, 10:22 am
தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.
Samayam Tamil பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!


கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அடுத்தாண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களிலும் சில கட்டுப்பாடுகளுடன் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி