ஆப்நகரம்

மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு

மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்படுவதாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jun 2018, 10:05 pm
மதுரை : மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்படுவதாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil plastic bags


இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சிய வீரராகவராவ் பேசியதாவது:
சுற்றுச் சூழலை காக்கும் பொருட்டு மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக ஒவ்வொரு மாவட்டமாக பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது மதுரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தடை விதிக்க 5 மாதங்கள் உள்ள நிலையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகள், காகித பைகள், கோப்பைகள், தென்னை, பனை ஓலை கூடைகள் ,பாக்கு மட்டை தட்டுகள்பயன்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச் சூழல், நிலத்தடி நீரை உயர்த்த சூழலை காக்கும் கடமை அனைவருக்கும் உண்டு என உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி