மதுரை: புதுக்கோட்டை கலெக்டர் கணேசன் மற்றும் அவரது உதவியாளர் ரமேஷ் ஆகியோர் மதிய உணவு திட்டத்தில் வேலைக்குச் சேர லஞ்சம் வாங்கியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் செல்வி என்பவர் தொடர்ந்த அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேசன் மற்றும் அவரது உதவியாளர் ரமேஷ் மதிய உணவு திட்டத்தில் வேலைக்கு சேர நபர் ஒன்றுக்கு 3 முதல் 4 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறியுள்ளார்.
பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் போன்றவை பிப்ரவரி மாதமே முடிந்த நிலையில், இடைத்தரகரைக் கொண்டு வேலைக்குப் பேரம் பேசியுள்ளனர். தற்போது, அக்டோபர் மாதம் முறைகேடாக சுமார் 130 பேரை பணியமர்த்தி உள்ளனர். எனவே அவற்றைச் செல்லாது எனவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி மாதவன் வழக்கை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒதுக்கி வைத்துள்ளார்.
Plea in Madras HC says Pudukottai collector, PA made illegal appointments.
தமிழ் செல்வி என்பவர் தொடர்ந்த அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேசன் மற்றும் அவரது உதவியாளர் ரமேஷ் மதிய உணவு திட்டத்தில் வேலைக்கு சேர நபர் ஒன்றுக்கு 3 முதல் 4 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறியுள்ளார்.
பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் போன்றவை பிப்ரவரி மாதமே முடிந்த நிலையில், இடைத்தரகரைக் கொண்டு வேலைக்குப் பேரம் பேசியுள்ளனர். தற்போது, அக்டோபர் மாதம் முறைகேடாக சுமார் 130 பேரை பணியமர்த்தி உள்ளனர். எனவே அவற்றைச் செல்லாது எனவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி மாதவன் வழக்கை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒதுக்கி வைத்துள்ளார்.
Plea in Madras HC says Pudukottai collector, PA made illegal appointments.