ஆப்நகரம்

நித்தியானந்தாவிடம் இருந்து மனைவியை மீட்க மனு

நித்தியானந்தா ஆஸ்ரமத்திலிருந்து தன் மனைவியை மீட்க ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 12 Jun 2018, 1:23 pm
நித்தியானந்தா ஆஸ்ரமத்திலிருந்து தன் மனைவியை மீட்க ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil 201806120704199756_Plea-to-rescue-wife-from-Nithyananda_SECVPF


நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், 8 மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்திற்குச் சென்ற தன் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் உடனே தன் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அடுத்த செய்தி