ஆப்நகரம்

அரசுப் பள்ளிகளுக்கு உதவ முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

அரசுப் பள்ளிகளுக்கு உதவ வருமாறு முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2018, 6:55 pm
அரசுப் பள்ளிகளுக்கு உதவ வருமாறு முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
Samayam Tamil sengottaiyanq


‘தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த பலர் தற்போது உன்னத நிலை அடைந்துள்ளார்கள். தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு எவ்வளவு தான் நிதி ஒதுக்கினாலும், இது என் பள்ளி, நான் படித்த பள்ளி என்ற எண்ணம் கொண்டவர்களின் துணை, அனைத்து அரசுப்பள்ளிகளையும் மெருகேற்றும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் தீட்டுதல், கழிப்பறை வசதி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு உதவ முன்வருபவர்களுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அன்பு உள்ளமும் தர்ம சிந்தனைகளையும் கொண்ட அணைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு தாங்கள் விரும்பும் அரசுப் பள்ளிக்கு உதவிட முன்வர வேண்டும்’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி