ஆப்நகரம்

அம்மாவை காப்பாற்றுங்கள், எம்.எல்.ஏ கூட்டம் ஏதற்கு? - சசிகலா புஷ்பா

அம்மாவைக் காப்பாற்றுங்கள் , முதல்வர் உடல்நிலை திரும்பாதாத நிலையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் எதற்கு? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 5 Dec 2016, 5:21 pm
அம்மாவைக் காப்பாற்றுங்கள் , முதல்வர் உடல்நிலை திரும்பாதாத நிலையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் எதற்கு? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil pls save amma jayalalitha say sasikala pushpaa
அம்மாவை காப்பாற்றுங்கள், எம்.எல்.ஏ கூட்டம் ஏதற்கு? - சசிகலா புஷ்பா


செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் நேற்று மாலை முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு,முதல்வரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அம்மாவைக் காப்பாற்றுங்கள் , முதல்வர் உடல்நிலை திரும்பாதாத நிலையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி