ஆப்நகரம்

மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர்: மோடி டுவீட்!

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Aug 2018, 3:35 pm
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Modi


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். சென்னை ராஜாஜி அரங்கத்தில் உள்ள அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி அங்கிருந்து, ராஜாஜி அரங்கம் சென்று கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் வந்தனர். தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் பிரதமர் மோடியுடன் வந்திருந்தார்.

அப்போது கனிமொழியின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, அழகிரி எங்கே’ என்று ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார். அதற்கு உடல் ஒத்துழைக்காத காரணத்தால் ராஜாஜி அரங்கின் பின்பகுதியில் அவர் அமர்ந்திருப்பதாக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.



இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி